சென்னை : ராயபுரம் ஆஞ்சநேயா நகர் 6வது தெருவில், மழை நீரில் ஊறிய நிலையில் இருந்த பாழடைந்த கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டம் ஆனது. இந்த விபத்தில் அருகில் இருந்த இளம் பெண் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ராயபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ளது.
The post ராயபுரத்தில் பாழடைந்த கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டம்!! appeared first on Dinakaran.